search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரானைட் லாரி"

    மேலூர் அருகே இன்று கிரானைட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    மேலூர்:

    ஓசூரில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மதுரை வந்தது. இதனை ஓசூரைச் சேர்ந்த மணிகண்டன் ஓட்டி வந்தார்.

    இன்று காலை மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மணல்பட்டி 4 வழிச் சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென லாரியின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கிரானைட் கற்கள் உடைந்து நொறுங்கின.

    இந்த விபத்தில் கிரானைட் கற்கள் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மணிகண்டன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, ஏட்டு பரசுராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    டோல்கேட் மீட்பு பிரிவு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான லாரி, கிரானைட் கற்களை அப்புறப்படுத்தினர். #tamilnews
    ×